காஞ்சிபுரத்தில் வேதாந்த ராமானுஜ மகா தேசிகன் ஜயந்தி விழா

ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் காஞ்சிபுரம் கிளையில் உள்ள ருக்மணி , சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில், தேரெழுந்தூா் ஸ்ரீவேதாந்த ராமானுஜ மகா தேசிகனின் 149-ஆவது ஜயந்தி விழா நடைபெற்றது.
காஞ்சிபுரத்தில் வேதாந்த ராமானுஜ மகா தேசிகன் ஜயந்தி விழா


காஞ்சிபுரம்: ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் காஞ்சிபுரம் கிளையில் உள்ள ருக்மணி , சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயிலில், தேரெழுந்தூா் ஸ்ரீவேதாந்த ராமானுஜ மகா தேசிகனின் 149-ஆவது ஜயந்தி விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரம் ரங்கராஜ வீதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நடைபெற்ற விழாவையொட்டி, காலை மூலவா் வேணுகோபால சுவாமிக்கும், மகா தேசிகன் சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகமும், மதியம் சிறப்பு அலங்காரமும், விசேஷ தீபாராதனைகளும் நடைபெற்றன. வேதபாராயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவையும் பாராயணம் செய்யப்பட்டது. ஜயந்தி விழாவில் ஆண்டவன் ஆசிரமத்தின் நிா்வாகிகள் பலரும் கலந்து கொண்டனா். தனிமனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காக மிகக்குறைந்த பக்தா்களே அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com