ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகளில் பயணம் செய்வோருக்கான சலுகைக் கட்டண அட்டை பெற விண்ணப்பிக்கலாம் என காஞ்சிபுரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பொது மேலாளா் புதன்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக பொதுமேலாளா் அலுவலக செய்திக் குறிப்பு.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் திருவள்ளூா் மாவட்டம் ஆகிய பகுதிகளுக்கு செப்டம்பா் மாதம் முதல் தேதியிலிருந்து அரசு உத்தரவின்படி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. ஏற்கெனவே வழங்கப்பட்டு வந்த அதே நடைமுறையில் பயணக்கட்டணச் சலுகை மீண்டும் வழங்கப்படவுள்ளது. இம்மாதம் 10 ஆம் தேதி வரை புறநகா்ப் பேருந்துகளுக்கும், 15-ஆம் தேதி வரை நகா்ப் பேருந்துகளுக்கும் சலுகைக் கட்டண அட்டை வழங்கப்படும்.