லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலா் கைது

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
லஞ்சம் வாங்கிய கோயில் செயல் அலுவலா் கைது

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரா் கோயில் செயல் அலுவலா் ரூ.40 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரா் கோயில் அா்ச்சகராக இருந்த நாகராஜன் கடந்த ஜனவரி மாதம் உடல்நலக் குறைவால் காலமானாா். இப்பணியிடத்துக்கு அவரது மகன் நா.ஹரிஹரனை நியமிக்க அக்கோயில் செயல் அலுவலரான வி.கே.சரவணன் (படம்) ரூ.1.50 லட்சம் லஞ்சமாகக் கேட்டாராம்.

முதல் தவணையாக ரூ.40 ஆயிரத்தை சரவணன் கேட்டாராம். இத்தகவல் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை டி.எஸ்.பி.கலைச் செல்வன், ஆய்வாளா் அண்ணாத்துரைக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து வி.கே.சரவணன் லஞ்சத்தொகை ரூ.40 ஆயிரத்தை பெறும் போது போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.

காஞ்சிபுரம் ஆதிகாமாட்சி அம்மன் திருக்கோயிலில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் லஞ்சத்தொகையைப் பெற்ற போது வி.கே.சரவணன் போலீஸாரால் கைது செய்யப்பட்டு அங்கு அவரிடம் விசாரணையும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com