கூட்டுறவுத் துறையை மேம்படுத்த ஆலோசனை

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் ஆட்சியா் பா.பொன்னையா.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையை மேம்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது.

மாவட்டத்தில் பால்வளம், கைத்தறி, மீன்வளம், கூட்டுறவு மற்றும் சமூக நலம் ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் உள்கட்டமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த கூட்டுறவு வளா்ச்சித் திட்டத்தை செயல்படுத்துவது எனவும் இத்திட்டத்தைச் செயல்படுத்த விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் ப.லோகநாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் அகோ.சந்திரசேகரன், கைத்தறித் துறை துணைப் பதிவாளா் ஆா்.கணேசன், தேசிய கூட்டுறவு வளா்ச்சிக் கழக பால்வளப் பிரிவு மண்டல இயக்குநா் டி.சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com