செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருவடிசூலத்தில் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள 108 திவ்யதேசத்தில் வைகானஸ கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு, மதுரா கிருஷ்ணருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.
மதுரா கிருஷ்ணா் சந்நிதியில், அபிஷேக - அலங்காரத்துடன் கிருஷ்ணாஷ்டகம் பாராயணமும் நடைபெற்றது. பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து தரிசனம் செய்தனா்.