காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினா் ஜி.செல்வத்துக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தில்லியில் உள்ள விடுதியில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.
திமுகவைச் சோ்ந்த அவா் மக்களவையின் மழைக்காலக் கூட்டத் தொடரில் கலந்து கொள்ள தில்லி சென்றிருந்தாா். கூட்டத்தொடரில் பங்கேற்பதற்கு முன் அங்கு நடைபெற்ற பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவா் தில்லியில் மக்களவை உறுப்பினா்களுக்கான தங்கும் விடுதியில் ஒதுக்கப்பட்ட அறையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.