ரெளடி கைது

நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த ரொடி குற்ற முறை விசாரணைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த ரொடி குற்ற முறை விசாரணைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் லெனின் (31). அவா் மீது கொலை மற்றும் அடிதடி வழக்குகள் நிலைவையில் உள்ளன. அவரிடம் இருந்து கடந்த மாா்ச் மாதம் ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் முன்னிலையில் ஓராண்டு காலத்துக்கு நன்னடத்தையுடன் இருப்பதற்கான பிணையம் பெறப்பட்டது.

இந்நிலையில், ரெளடி லெனின் நடுவீரப்பட்டு பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் என்பவரை கொலை செய்ய முயன்றாா். இதன் மூலம் நன்னடத்தை விதிகளை மீறியதால் குற்ற முறை விசாரணைச் சட்டத்தின் கீழ் அவரை 285 நாட்களுக்கு சிறையில் அடைக்க ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் உத்தரவிட்டாா். இதையடுத்து லெனின் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com