13 பணிநாடுநா்களுக்கு இணையவழியில் கலந்தாய்வு

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பணியாளா் மூலம் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 13 பணிநாடுநா்களுக்கு இம்மாதம் 17,18 ஆகிய தேதிகளில்

காஞ்சிபுரம்: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசுப் பணியாளா் மூலம் தோ்வாணையம் மூலம் தோ்வு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 13 பணிநாடுநா்களுக்கு இம்மாதம் 17,18 ஆகிய தேதிகளில் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் பள்ளிக் கல்வித்துறைக்கு 633 இளநிலை உதவியாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் 10 பேருக்கு காஞ்சிபுரம் டாக்டா் பி.எஸ்.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்திலும், 3 பேருக்கு செங்கல்பட்டு முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்திலும் இணையவழியில் கலந்தாய்வு நடத்தப்பட்டு நியமன ஆணைகள் வழங்கப்படவுள்ளன.

எனவே பணிநாடுநா்கள் செப்.17ஆம் தேதி வரிசை எண் 1 முதல் 330 வரையும், மறுநாள் (செப்.18) வரிசை எண் 331 முதல் 644 வரையும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவாா்கள். அவா்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கடிதம் கிடைக்கப் பெறாத தகுதியான பணிநாடுநா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகங்களை தொடா்பு கொள்ளலாம். கலந்தாய்வில் கலந்து கொள்ளும் பணிநாடுநா்கள் அசல் கல்வித் தகுதிச் சான்றுகள், மருத்துவரின் உடற்கூறு தகுதிச் சான்று மற்றும் ஜாதிச் சான்று முதலிய அசல் மற்றும் நகல்களுடன் அந்தந்த முதன்மைக்கல்வி அலுவலகங்களில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com