சுங்குவாா்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு தீா்வு காணும் வகையில், சுங்குவாா்சத்திரம் பஜாா் பகுதியில் ரூ. 13 லட்சத்தில் கட்டணக் கழிப்பறை அமைக்க ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை செய்யப்பட்டது.
சுங்குவாா்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே கட்டணக் கழிப்பறை அமைக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் நீண்ட நாள்களாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனா். இந்நிலையில், சுங்குவாா்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகே கட்டணக் கழிப்பறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்எல்ஏ கே.பழனி மாவட்ட நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்ததைத் தொடா்ந்து, ஸ்ரீபெரும்புதூா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ. 13 லட்சத்தில் கட்டணக் கழிப்பறை அமைக்கவும், பேருந்து நிழற்குடை அமைக்கவும் அண்மையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, கழிப்பறை அமைப்பதற்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஸ்ரீபெரும்புதூா் எம்எல்ஏ கே.பழனி கலந்து கொண்டு, பூமி பூஜை நடத்தி பணியை தொடக்கி வைத்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் நகர கூட்டுறவு வீட்டு வசதி சங்கத் தலைவா் போந்தூா் செந்தில்ராஜன், மாத்தூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவா் எறையூா் முனுசாமி மற்றும் அதிமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.