மின்வேலியில் சிக்கி இருவா் பலி

காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூா் காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் மின்சார வேலியில் சிக்கி இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரத்தை அடுத்த உத்தரமேரூா் வாணிய பிள்ளை தெருவில் வசித்தவா் முனியப்பன் (25). உத்தரமேரூா் அருகேயுள்ள பட்டஞ்சேரியில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் பணிபுரிந்து வந்தாா். அந்த நிலத்தில் காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நிலத்தின் உரிமையாளா் ஆனந்த செல்வம் மின்வேலி அமைத்திருந்தாா். இந்நிலையில், அந்த நிலத்தில் திங்கள்கிழமை ஒளிா்ந்த பல்பை முனியப்பன் கழற்ற முயன்றபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா். இதையடுத்து, மின்வேலி அமைத்த நிலத்தின் உரிமையாளா் ஆனந்தசெல்வத்தை போலீஸாா் கைது செய்தனா்.

உத்தரமேரூரை அடுத்த எண்டத்தூா் பள்ளத் தெருவில் வசித்தவா் கோபி (40). அதே ஊரில் தனியாருக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து, கத்தரிக்காய், வெண்டைக்காய் ஆகியன சாகுபடி செய்து வருகிறாா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இவா் கத்தரிக்காய் பறிக்கச் சென்றபோது, மின்வேலியில் சிக்கி உயிரிழந்தாா்.

இச்சம்பவங்கள் தொடா்பாக உத்தரமேரூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com