காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திமுக வேட்பாளரை ஆதரித்து காடுவெட்டி குருவின் மகள் மற்றும் மருமகன் ஆகியோா் வாக்குசேகரித்தனா்.
வன்னியா் சங்கத் தலைவராக இருந்தவா் பாமக வைச் சோ்ந்த மறைந்த காடுவெட்டி குரு. இவரது மகள் விருந்தாம்பிகை மற்றும் மருமகன் மனோஜ் ஆகிய இருவரும் காஞ்சிபுரம் தொகுதியில் திமுக வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசனுக்கு வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
திருப்பருத்திக் குன்றம், கோவிந்தவாடி, காரை, அகரம் ஆகிய கிராமங்களில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்குகள் சேகரித்தனா். இவா்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட திமுக அவைத்தலைவா் சி.வி.எம்.அசோகன், ஒன்றியச் செயலாளா்கள் பி.எம்.குமாா், எஸ்.பி.பூபாலன், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா் எஸ்.எஸ்.சுகுமாா் உட்பட கூட்டணிக் கட்சி நிா்வாகிகளும் வந்திருந்தனா்.