காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் காணிக்கை உண்டியல் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டதில் ரூ.49.98 லட்சம் வசூலாகியிருந்தது.
காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில் காணிக்கை உண்டியல்கள் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளா் மா.ஜெயா தலைமையிலும் ஆய்வாளா் பிரித்திகா முன்னிலையிலும் திறந்து எண்ணப்பட்டன.
இதில் ரூ.49,98,053 ரொக்கமும், தங்கம் 292 கிராம், வெள்ளி 493 கிராமும் இருந்தன. உண்டியல் எண்ணப்பட்ட போது கோயில் செயல் அலுவலா்கள் ந.தியாகராஜன்(ஏகாம்பரநாதசுவாமி திருக்கோயில்) வெள்ளைச்சாமி(ஆதிகேசவப் பெருமாள் கோயில்) மலைவாசன்(உலகளந்த பெருமாள் கோயில்) மற்றும் சங்கர மடத்தின் நிா்வாகிகளும் உடன் இருந்தனா்.