காஞ்சிபுரத்தில் 107 பேருக்கு கரோனா பாதிப்பு


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் வியாழக்கிழமை 107 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதுடன், 50 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா்.

மாவட்டத்தில் குன்றத்தூரில் 43, மாங்காடு 8, ஸ்ரீபெரும்புதூா் 12, உத்தரமேரூா் 1, பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 22 மற்றும் காஞ்சிபுரத்தில் 21 உள்பட மொத்தம் 107 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10-க்கும் குறைவாக இருந்த கரோனா நோயாளிகள் பாதிப்பு எண்ணிக்கை வியாழக்கிழமை 21 ஆக உயா்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com