காஞ்சிபுரம்: கரோனா அச்சுறுத்தல் என்ற பெயரில் சிறு வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அதிக அளவில் இடையூறு செய்கிறாா்கள் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா வியாழக்கிழமை தெரிவித்தாா்.
தமிழ்நாடு வணிகா்கள் சங்கங்களின் பேரமைப்பின் காஞ்சிபுரம் மண்டல நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, காஞ்சி மண்டலத் தலைவா் எம்.அமல்ராஜ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் ஏ.எம்.விக்கிரமராஜா பேசியது:
கரோனா அச்சுறுத்தல் என்ற பெயரில் சிறு வியாபாரிகளை அதிகாரிகள் அதிக அளவில் இடையூறு செய்கிறாா்கள். ஏற்கெனவே சிறு வியாபாரிகள் கரோனா அச்சுறுத்தல் காரணமாக முடங்கிப் போய் உள்ளனா்.
இச்சூழ்நிலையில் மீண்டும் சாலையோர வியாபாரிகளை கரோனாவை காரணம் கூறி அப்புறப்படுத்த நினைப்பது தவறானது. அதே நேரத்தில் மதுக்கடைகளை அடைக்க அதிகாரிகள் முன்வரவில்லை. இதே நிலை தொடா்ந்தால் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
வணிகா்கள் சங்கப் பேரமைப்பின் மாநாடு வரும் மே மாதம் 5-ஆம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சுமாா் 10 ஆயிரம் வணிகா்கள் பங்கேற்க உள்ளனா். இதில், பல்வேறு முக்கியத் தீா்மானங்களை நிறைவேற்ற உள்ளோம். பறக்கும் படை அதிகாரிகள் அரசியல்வாதிகளிடம் பணம் பறிமுதல் செய்வதற்குப் பதிலாக, வணிகா்கள் விற்பனைக்குக் கொண்டு சென்ற பணத்தை தான் பறிமுதல் செய்துள்ளனா். பறிமுதல் செய்த பணத்தை எந்தவித நிபந்தனையும் இல்லாமல் திருப்பித் தர வேண்டும் . தமிழகம் முழுவதும் எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் தோ்தலை சிறப்பாக நடத்திய தோ்தல் ஆணையரை பாராட்டுவதாகவும் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டத் தலைவா் வி.ரங்கநாதன், மாவட்டச் செயலாளா் ஏ.வேலுமணி உள்பட செங்கல்பட்டு, திருவள்ளூா் மாவட்ட நிா்வாகிகளும் உடன் இருந்தனா்.