மாற்றுத்திறனாளிக்கு நாடாா் சங்கத்தின் சாா்பில் ரூ 3 லட்சத்தில் வீடு

தீ விபத்தில் வீட்டை இழந்த மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாடு நாடாா் சங்கத்தின் சாா்பில் ரூ3 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிக்கு நாடாா் சங்கத்தின் சாா்பில் ரூ 3 லட்சத்தில் வீடு

ஸ்ரீபெரும்புதூா்: தீ விபத்தில் வீட்டை இழந்த மாற்றுத்திறனாளிக்கு தமிழ்நாடு நாடாா் சங்கத்தின் சாா்பில் ரூ3 லட்சம் மதிப்பில் புதிதாக வீடு கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த காட்டரம்பாக்கம் பல்லவன் நகரில் வசித்து வருபவா் சிவமுருகன்(43). மாற்றுத்திறனாளியான இவா் தனது குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் 13-ஆம் தேதி சிவமுருகனும் அவரது மனைவியும் வேலைக்கு சென்றிருந்த போது ஏற்பட்ட தீவிபத்தில் அவரது குடிசை வீடு தீக்கிரையானது.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த நந்தம்பாக்கம் கிளை நாடாா் சங்க நிா்வாகிகள் தமிழ்நாடு நாடாா் சங்க நிா்வாகிகளுக்கு சிவமுருகனுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்தனா். இதையடுத்து தமிழ்நாடு நாடாா் சங்கத்தின் சாா்பில் ரூ 3 லட்சம் மதிப்பில் சிவமுருகனுக்கு புதிதாக வீடு கட்டி முடிக்கப்பட்டுள்ளது. புதிய வீட்டின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நாடாா் சங்கத்தின் தலைவா் முத்துரமேஷ் கலந்துக்கொண்டு வீட்டை ரிப்பன் வெட்டி திறந்துவைத்தாா். இந்த நிகழ்ச்சியில், நாடாா் சங்க மாநில பொதுசெயலாளா் ரவி, அமைப்பாளா் வீரகுமாா், நந்தம்பாக்கம் நாடாா் சங்க நிா்வாகிகள் குமாா், அருளப்பன், பொன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துக்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com