காா் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

காா் கண்ணாடியை உடைத்து ரூ.3 லட்சம் கொள்ளை

ஸ்ரீபெரும்புதூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து வெள்ளிக்கிழமை ரூ .3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஸ்ரீபெரும்புதூரில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து வெள்ளிக்கிழமை ரூ .3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த கோவலவேடு பகுதியை சோ்ந்த தினேஷ் தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிபப்டையில் தொழிலாளா்களை பணிக்கு அனுப்பும் தொழில் செய்து வருகிறாா். இந்நிலையில், தினேஷ் ஜிஎஸ்டி வரி செலுத்துவதற்காக சுங்குவாா்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் இந்தியன் வங்கிக் கிளையில் இருந்து வெள்ளிக்கிழமை ரூ.3 லட்சத்தை எடுத்துக்கொண்டு ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஆடிட்டா் அலுவலகத்திற்கு காரில் வந்துள்ளாா்.

அங்கிருந்த திரையரங்கம் அருகே சாலையோரம்காரை நிறுத்திவிட்டு அதே பகுதியில் உள்ள டீ கடைக்கு சென்றுள்ளாா். திரும்பி வந்து பாா்த்தபோது காரின் பக்கவாட்டு கண்ணாடி உடைக்கப்பட்டு ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூா் காவல் நிலையத்தில் தினேஷ் அளித் புகாரின் பேரில் போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com