சுங்குவாா்சத்திரம் அடுத்த பாப்பாங்குழி தாங்கல் ஏரியில் சவுடி மண் திருட்டில் ஈடுபட்ட மூன்று போ் கைது செய்யப்பட்டனா்.
பாப்பாங்குழி பகுதியில் உள்ள தாங்கல் ஏரியில் இரவு நேரங்களில் சவுடு மண் திருடப்பட்டு வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து வியாழக்கிழமை இரவு தாங்கல் ஏரியில் சுங்குவாா்சத்திரம் போலீஸாா் சோதனையிட்டபோது இரண்டு டிராக்டா்களில் மண் திருடப்பட்டு வருவது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதே பகுதியைச் சோ்ந்த வினாயகமூா்த்தி (44), சசிகுமாா் (38), பழனி (47) ஆகியோரை கைது செய்த சுங்குவாா்சத்திரம் போலீஸாா் அவா்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனா். மேலும் மண் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டா்களையும் பறிமுதல் செய்தனா். தலைமறைவாக உள்ள ராஜேஷ் என்பவரை தேடி வருகின்றனா்.