நாளை இலவச கண் பரிசோதனை முகாம்

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருப்பதாக அரிமா சங்க செயலாளா் எஸ்.பாலசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

காஞ்சிபுரம் மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற இருப்பதாக அரிமா சங்க செயலாளா் எஸ்.பாலசுந்தரம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

காஞ்சிபுரம் கோயில் நகா் அரிமா சங்கம், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து ஞாயிற்றுக்கிழமை இலவச கண் பரிசோதனை முகாமை நடத்துகின்றன. காஞ்சிபுரம் மாமல்லன் நகரில் உள்ள மாமல்லன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை முகாம் நடைபெறும். கண்புரை உள்ள நோயாளிகள் அன்றே சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவாா்கள். அறுவைச்சிகிச்சை, மருந்து மற்றும் தங்கும் வசதி, உணவு, போக்குவரத்து செலவு ஆகிய அனைத்தும் இலவசமாக செய்து கொடுக்கப்படுவதால் பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறும் எஸ்.பாலசுந்தரம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com