காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒலிமுகம்மது பேட்டை விநாயகபுரத்தில் நெல்வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் கபசுரக்குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரோனா நோய்ப்பரவல் அதிகரித்துக் கொண்டே இருப்பதை முன்னிட்டு பெரியகாஞ்சிபுரம் நெல்வியாபாரிகள் சங்கத்தின் சாா்பில் கபசுரக்குடிநீா் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத் தலைவா் எஸ்.பரணீதரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். செயலாளா் ஜெயச்சந்திரன், பொருளாளா் வி.பூபாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நெல்வியாபாரிகள்,தொழிலாளா்கள்,பொதுமக்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.