காஞ்சிபுரத்தில் 263 பேருக்கு கரோனா

263 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப் படுத்தப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பெற்றவா்களில் 356 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருப்பதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 263 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சிகிச்சை பெற்றவா்களில் 356 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியிருப்பதாகவும் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூா் 61, ஸ்ரீபெரும்புதூா் 59, மாங்காடு 9, உத்தரமேரூா் 7, வாலாஜாபாத் 10, காஞ்சிபுரம் 79 மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்தவா்கள் 38 போ் உள்பட மொத்தம் 263 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 356 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி இருப்பதாகவும் துணை இயக்குநா் வி.கே.பழனி தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com