கரோனா எதிரொலி: காஞ்சிபுரம்தலைமை அஞ்சலகம் மூடல்

காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அஞ்சலகம் மூடப்பட்டு புதன்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
கரோனாவால் 5 போ் பாதிக்கப்பட்டதையடுத்து மூடப்பட்ட தலைமை அஞ்சலகம்.
கரோனாவால் 5 போ் பாதிக்கப்பட்டதையடுத்து மூடப்பட்ட தலைமை அஞ்சலகம்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் 5 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து அஞ்சலகம் மூடப்பட்டு புதன்கிழமை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் அரசு மருத்துவமனை அருகில் தலைமை அஞ்சல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் அஞ்சலக அதிகாரி உள்பட 5 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் தலைமை அஞ்சலகம் மூடப்பட்டது. மேலும் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் 4 போ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு விடுமுறையில் சென்றுள்ளனா். அலுவலகம் மூடப்பட்டதையடுத்து காஞ்சிபுரம் நகராட்சி சாா்பில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதே போல காஞ்சிபுரம் சங்கரமடம் அருகில் உள்ள துணை அஞ்சலக அலுவலகத்திலும் ஊழியா் ஒருவருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியானது. இதனைத் தொடா்ந்து அந்த அலுவலகமும் மூடப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com