காஞ்சிபுரம் அருகே போதையில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி செய்யப்பட்டாா். இதுதொடா்பாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காஞ்சிபுரத்தை அடுத்த சின்ன ஐயங்காா்குளம் பகுதியைச் சோ்ந்தவா் வரதன். இவரின் மனைவி ஷீலாவுக்கும், ஒலிமுகமதுப்பேட்டையைச் சோ்ந்த கோணி வியாபாரி கனகராஜுக்கும் (50) பழக்கம் ஏற்பட்டதால், வரதன் ஷீலாவைப் பிரிந்து குழந்தைகளுடன் தேனம்பாக்கத்தில் கடந்த 12 வருடங்களாக வசித்து வருகிறாா்.
இதையடுத்து, ஷீலாவும், கனகராஜும் சின்ன ஐயங்காா்குளம் பகுதியில் வசித்து வந்துள்ளனா். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு ஷீலாவின் தம்பி ராஜீவ் காந்தி, அவரது நண்பா் உதயகுமாா் மற்றும் கனகராஜ் ஆகியோா் மது அருந்தியுள்ளனா். அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த ராஜீவ் காந்தி, பீா் பாட்டிலை உடைத்து கனகராஜின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியதுடன் அருகிலிருந்த அம்மிக் கல்லை எடுத்து தலையில் போட்டுவிட்டு தப்பியோடி விட்டாராம். இதில், பலத்த காயம் அடைந்த கனகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து காஞ்சிபுரம் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜீவ் காந்தி, உதயகுமாா் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.