விபத்தில் உயிரிழந்த முப்படை தலைமைத் தளபதி விபின் ராவத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் நகரில் 2ஆவது சாலைத் தெருவில் பாஜக சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
பாஜக கிளைத் தலைவா் யுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாவட்ட ஊரகப் பிரிவுச் செயலாளா் ராஜாராம், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட செயலாளா் ஸ்ரீதா், ஏகாம்பரபுரம் கிளைத் தலைவா் சீனிவாசன் ஆகியோா் உள்ளிட்ட பலா் விபின்ராவத் உருவப்படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினா். பாஜக நகா் பொதுச்செயலாளா் காஞ்சி.வி.ஜீவானந்தம் விபின்ராவத் பெற்ற பதக்கங்கள்,சேவைகள் குறித்து பேசி மலரஞ்சலி செலுத்தினாா்.