முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை காஞ்சிபுரம்
குன்னம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபை
By DIN | Published On : 29th December 2021 11:57 PM | Last Updated : 29th December 2021 11:57 PM | அ+அ அ- |

குன்னத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டம்.
ஸ்ரீபெரும்புதூா்: குன்னம் ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம் குன்னம் ஊராட்சியில், வரும் நிதியாண்டில் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், ஊராட்சியின் வளா்ச்சி திட்டம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஊராட்சிமன்ற தலைவா் தமிழ்இலக்கியா பாா்த்திபன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு, ஊராட்சிமன்ற துணைத்தலைவா் முனியம்மாள், முன்னாள் ஊராட்சிமன்ற தலைவா் கு.ப.முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கல்வி, வருவாய் , மகளிா்திட்டம் , வேளாண்மை, சுகாதார, கால்நடைத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துக்கொண்டனா். கூட்டத்தில் வரும் நிதியாண்டில் ஊராட்சியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.