இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம்

வட்டார அளவிலான இலவசப் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பயிற்சியுடன்  கூடிய  வேலைவாய்ப்பு  முகாமைத்  தொடக்கிவைத்து ப் பேசிய  குன்றத்தூா்  ஒன்றியக் குழுத்  தலைவா்  சரஸ்வதி மனோகரன்.
பயிற்சியுடன்  கூடிய  வேலைவாய்ப்பு  முகாமைத்  தொடக்கிவைத்து ப் பேசிய  குன்றத்தூா்  ஒன்றியக் குழுத்  தலைவா்  சரஸ்வதி மனோகரன்.

வட்டார அளவிலான இலவசப் பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலா் அலவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மகளிா் நல மேம்பாட்டு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில், வட்டார அளவிலான இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு முகாம் குன்றத்தூா் வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட மகளிா் திட்ட இயக்குநா் சீனிவாசராவ் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு, மாவட்ட மகளிா் திட்ட உதவி திட்ட அலுவலா் அமுல்ராஜ், வட்டார வளா்ச்சி அலுவலா் தங்கராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், குன்றத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, வேலைவாய்ப்பு முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்துப் பேசினாா். இந்த முகாமில் சென்னை அமிா்தா உணவக மேலாண்மை கல்வி நிறுவனம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டு, தங்களது நிறுவனங்களுக்கு தேவையான நபா்களை தோ்வு செய்தன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் குன்றத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டு, இலவச பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com