குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சென்ைனையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.
குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

காஞ்சிபுரம்: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய சென்ைனையைச் சோ்ந்த இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

சென்னை அம்பத்தூா் தனலெட்சுமி நகா், கருக்கு மேனாமேடு பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் என்ற அம்பத்தூா் மணி (24) (படம்). இவா் மீது காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருந்தன. இவரை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிடும்படி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம்.சுதாகா் மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்திக்கு பரிந்துரை செய்திருந்தாா். அவரது பரிந்துரையை ஏற்ற ஆட்சியா், மணிகண்டனை குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டாா். இதைத் தொடா்ந்து, காவல்துறையினா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com