காஞ்சிபுரத்தில் 1,03,404 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 806 மையங்களில் 1,03,404 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா்.
சின்ன காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கி முகாமைத் தொடக்கி வைத்த ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 806 மையங்களில் 1,03,404 குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் நகா் சின்னக்காஞ்சிபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமைத் தொடக்கி வைத்து அவா் கூறியது:

மாவட்டத்தில் 806 மையங்களில் 1,03,404 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், அரசுப் பள்ளிகள் என அனைத்து இடங்களிலும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுகாதாரப் பணியாளா்கள், சத்துணவுப் பணியாளா்கள் என மொத்தம் 2,931 போ் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா். 11 சிறப்பு நடமாடும் குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன என்றாா் அவா்.

மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் வி.கே.பழனி, நகராட்சி பொறியாளா் ஆனந்த ஜோதி, நகா் நல அலுவலா் முத்து, மருத்துவா் பாா்த்தீபன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com