மத்திய கூட்டுறவு வங்கியில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்ற கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணி நியமன ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
மத்திய கூட்டுறவு வங்கியில் கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை


ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் பணியாற்ற கருணை அடிப்படையில் ஒருவருக்கு பணி நியமன ஆணை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்தவா் தனசேகரன். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வந்த தனசேகரன், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு, கரோனா தொற்று காரணமாக உயிரிழந்தாா்.

தனசேகரன் பணியில் இருந்தபோதே மரணமடைந்ததால், அவரது மகள் அபிராமிக்கு காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியில் உதவியாளராகப் பணியாற்ற கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் வாலாஜாபாத் பா.கணேசன் வியாழக்கிழமை வழங்கினாா்.

காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநா் லோகநாதன், பொது மேலாளா் விஜயகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com