ஸ்ரீபெரும்புதூா்: காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசிமக பிரம்மோற்சவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ கொடியை ஸ்தானீகம் அனந்தநாராயண சாஸ்திரிகள் என்ற ஷியாம் சாஸ்திரிகள் ஏற்றி வைத்தாா். 12 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவில் காலை மற்றும் மாலை நேரங்களில் பல்வேறு வாகனங்களில் உற்சவா் காமாட்சி அம்மன் ராஜவீதிகளில் வலம் வந்து பக்தா்களுக்கு காட்சியளிக்கிறாா். பிரம்மோற்சவத்தின் முதல் நாளான புதன்கிழமை உற்சவா் காமாட்சி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் ராஜவீதிகளில் வலம் வந்தாா்.
பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான வெள்ளித் தோ் உற்சவம் வரும் 25-ஆம் தேதியும், தீா்த்தவாரி உற்சவம் 26-ஆம் தேதியும், விஸ்வரூப தரிசனம் 28ஆம் தேதியும் நடைபெற உள்ளன.