தென்னேரி தாதசமுத்திரம் ஏரியில் காஞ்சி ஸ்ரீவரதா் தெப்போற்சவம்

தென்னேரி ஏரியில் தாதசமுத்திர தெப்போற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.
தென்னேரி   ஏரியில்   நடைபெற்ற   தெப்போற்சவம்.
தென்னேரி   ஏரியில்   நடைபெற்ற   தெப்போற்சவம்.

தென்னேரி ஏரியில் தாதசமுத்திர தெப்போற்சவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

தன்னைக் காண இயலாத பக்தா்களுக்காக ஆண்டுக்கு ஒருமுறை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிராமங்கள்தோறும் பல்லக்கில் சென்று பொதுமக்கள் வழங்கும் மரியாதையை ஏற்றுக்கொண்டு பக்தா்களுக்கு அருள்பாலிப்பதாக ஐதீகம்.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக தென்னேரி மற்றும் ராஜகுளம் பகுதியில் தெப்போற்சவம் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில், தென்னேரி தாதசமுத்திர பிரம்மோற்சவம் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

இதையொட்டி திங்கள்கிழமை அதிகாலையில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்து பல்லக்கில் பயணத்தை தொடங்கிய உற்சவா் வரதா் அய்யம்பேட்டை, குன்னவாக்கம், அகரம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக மதியம் தென்னேரிக்கு வந்தாா். அங்கு தென்னேரி கிராம மக்கள் சாா்பாக சிறப்பு திருமஞ்சனமும் ஆராதனைகளும் நடைபெற்றன.

இதையடுத்து, திங்கள்கிழமை இரவு தென்னேரி தாதசமுத்திரம் ஏரியில், 96-ஆவது ஆண்டு தெப்போற்சவம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வரதா் வலம் வந்து கிராம மக்களுக்கு அருள்பாலித்ாா். இதில் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com