மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை நடத்தினா் .
மாற்றுத் திறனாளிகள் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் செவ்வாய்க்கிழமை நடத்தினா் .

தமிழ்நாடு அனைத்து மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டப் பொருளாளா் பாலாஜி தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஹரிகிருஷ்ணன், பாக்யராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் பாய், போா்வை போன்றவற்றுடன் வந்து காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்துக்குள் உள்ளே செல்ல முயன்றனா்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தியதைத் தொடா்ந்து

அலுவலக நுழைவாயில் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதே போன்று உத்தரமேரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு மாதாந்திர உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி திருவோடு ஏந்தி மாற்றுத் திறனாளிகள் ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com