ஸ்ரீபெரும்புதூர்: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணிச் செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் ஏற்பாட்டில், 5,073 பேருக்கு நல உதவிகள் வழங்கும் விழா, ரத்ததான முகாம் முத்தியால்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரத்தை அடுத்த முத்தியால்பேட்டையில் நடைபெற்ற விழாவில், மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம், கட்சியின் அமைப்பு செயலர் வாலாஜாபாத் பா.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு, கட்சிக் கொடியேற்றி 73 கிலோ எடையுள்ள கேக் வெட்டி, 5,073 பேருக்கு பட்டுப் புடவைகளை வழங்கினர். இதையடுத்து, நடைபெற்ற ரத்ததான முகாமில் 73 பேர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
விழாவில் அதிமுக மாவட்ட அவைத் தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, மாநில இளைஞர் அணி இணைச் செயலர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, காஞ்சிபுரம் தெற்கு ஒன்றியச் செயலர் துப்பவனம் ஜீவானந்தம், அரசு வழக்குரைஞர் கே.சம்பத், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியச் செயலர் அக்ரி நாகராஜன், டி.யோகானந்தம், வாலாஜாபாத் சரவணன், மணிகண்டன், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றிய இளைஞர் அணிச் செயலர் ஏரிவாயல் ராஜி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.