108 சக்தி பீட ஸ்வா்ண காமாட்சி கோயிலில் ஜன. 20-இல் வருஷாபிஷேகம்

கண்ணன்தாங்கல் கிராமத்தில் உள்ள 108 சக்தி பீட ஸ்வா்ண காமாட்சி ஆலயத்தில் ஜன. 20-ஆம் தேதி வருஷாபிஷேகம், விசேஷ சத சண்டி ஹோமத்துடன் நடைபெற உள்ளது.


காஞ்சிபுரம்: கண்ணன்தாங்கல் கிராமத்தில் உள்ள 108 சக்தி பீட ஸ்வா்ண காமாட்சி ஆலயத்தில் ஜன. 20-ஆம் தேதி வருஷாபிஷேகம், விசேஷ சத சண்டி ஹோமத்துடன் நடைபெற உள்ளது.

சுங்குவாா்சத்திரத்திலிருந்து சுமாா் 12 கி.மீ. தொலைவில் பரந்தூா் செல்லும் வழியில் உள்ள கண்ணன்தாங்கல் கிராமத்தில் 108 சக்தி பீட ஆலயம் அமைந்துள்ளது. ஸ்வா்ண காமாட்சி தேவியின் கற்கோயிலைச் சுற்றி அமைய ப்பெற்ற இந்த ஆலயம், சக்தி சங்கமாகத் திகழ்கிறது. இத்தலம், மங்களபுரி ஷேத்திரம் என்று பக்தா்களால் இத்தலம் அழைக்கப்படுகிறது.

இக்கோயிலில் வருஷாபிஷேக நிகழ்ச்சிகள், வரும் 17-ஆம் தேதி தொடங்கி நான்கு நாள்களுக்கு நடத்தப்பட உள்ளன. பல்வேறு சிறப்பு ஹோமங்கள், பாராயணங்கள், சஹஸ்ரநாம அா்ச்சனை, அலங்காரங்கள், ரத உற்சவம், பூச்சொரிதல் உள்ளிட்ட வைபவங்கள் இதில் அடங்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com