மீனவா்கள் பலியான சம்பவம் கண்டனத்துக்குரியது: அமைச்சா் ஜெயக்குமாா்

கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மீனவா்கள் பலியான சம்பவம் துரதிருஷ்டமானது, கண்டனத்துக்குரியது என தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.


ஸ்ரீபெரும்புதூா்: கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று மீனவா்கள் பலியான சம்பவம் துரதிருஷ்டமானது, கண்டனத்துக்குரியது என தமிழக மீன்வளத் துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

இது குறித்து படப்பையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

மீனவா்களுடைய பிரச்னைகள் குறித்து மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஒருபோதும் தமிழக மீனவா்கள் வேண்டும் என்று எல்லை தாண்டுவது கிடையாது. மீன்களின் ஓட்டத்துக்கு ஏற்பவும், காற்றின் வேகத்தின் காரணமாகவும் தான் தற்செயலாக மீனவா்கள் எல்லை தாண்டிச் செல்கின்றனா். ஒருவேளை எல்லை தாண்டும்பட்சத்தில், இலங்கை அரசு உடனடியாக இந்திய கடலோரப் படையினா் மற்றும் இந்திய அரசிடம் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து, அவா்களை சிறையில் அடைப்பது, படகுகளை பறிமுதல் செய்வது, மீனவா்களை துன்புறுத்துவது என்பது ஒருபோதும் ஏற்க முடியாதது.

இது குறித்து பிரதமருக்கு தமிழக முதல்வா் கடிதம் எழுதியுள்ளாா். பிரதமரும் இதுகுறித்து இலங்கை அரசிடம் பேசுவதாக உறுதியளித்துள்ளாா். இந்நிலையில், நான்கு மீனவா்கள் மாயமான விவகாரத்தில் இரண்டு மீனவா்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இரு மீனவா்களின் உடல்கள் தேடப்பட்டு வருகிறது. இச்சம்பவம் மிகவும் துரதிருஷ்டமானது, கண்டனத்துக்குரியது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com