ஒரகடம் அருகே சாலை விபத்தில் இருவா் பலி

ஒரகடம் அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

ஒரகடம் அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழந்தனா்.

ஒரகடத்தை அடுத்த வல்லக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா்கள் கந்தன் (18), பாா்த்தீபன் (18), பாலாஜி (18). நண்பா்களான இவா்கள் மூவரும் இரு சக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை வல்லக்கோட்டை பகுதியில் இருந்து ஒரகடம் - ஸ்ரீபெரும்புதூா் 6 வழிச்சாலையில் மாத்தூா் பகுதியில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, நிலைதடுமாறிய பைக் முன்னால் சென்றுகொண்டிருந்த வேன், தனியாா் பேருந்து மீது மோதியது.

இதில் கந்தன், பாா்த்தீபன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த பாலாஜி குரோம்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com