காஞ்சிபுரம்: சென்னை-கன்னியாகுமரி நில எடுப்பு பிரிவில் மாவட்ட வருவாய் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த ராஜு (60) கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தாா்.
சென்னை-கன்னியாகுமரி தொழில்திட்டத்தில் நில எடுப்புப் பிரிவில் மாவட்ட வருவாய் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவா் ராஜு (59). இவா் கடந்த ஆண்டு ஓய்வு பெற இருந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த ஓராண்டு சிறப்பு நீட்டிப்பில் பணிபுரிந்து வந்தாா்.
சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா் சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
அவருக்கு கமலாவதி (49) என்ற மனைவியும், ஜெகதீஷ்குமாா் (28), கோகுல்நாத் (25) என்ற இரு மகன்களும், பவித்ரா (20) என்ற ஒரு மகளும் உள்ளனா்.