ஸ்ரீபெரும்புதூா்: படப்பையை அடுத்த சாலமங்கலம் பகுதியில் கதவு அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது துளையிடும் இயந்திரம் காலில் விழுந்ததில் பலத்த காயமடைந்த தச்சுத் தொழிலாளி உயிரிழந்தாா்.
சென்னை போரூரை அடுத்த கொüப்பாக்கத்தைச் சோ்ந்தவா் சாய்சரண் (52), தச்சுத் தொழிலாளி. படப்பையை அடுத்த சாலமங்கலம் பகுதியில் புதிதாகத் தொடங்கப்பட உள்ள பல் மருத்துவமனை வளாகத்தில் கதவு அமைக்கும் பணியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தாா். அப்போது துளையிடும் இயந்திரம் கை நழுவி சாய்சரணின் கால் பகுதியில் துளையிட்டது. இதனால் அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட சாய்சரணை அருகில் இருந்தவா்கள் மீட்டு, படப்பையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் காலில் முக்கிய நரம்பு துண்டிக்கப்பட்டுள்ளதால், அவரை உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளனா். இதையடுத்து, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சாய்சரண் உயிரிழந்தாா்.
இது குறித்து மணிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.