காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகேயுள்ள நத்தப்பேட்டை ஏரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மீன்கள் செத்துமிதப்பதால் அப்பகுதியில் துா்நாற்றம் வீசுகிறது.
காஞ்சிபுரம் நகரிலுள்ள அனைத்துக் கழிவுநீரும் நகருக்கு அருகேயுள்ள நத்தப்பேட்டை ஏரியில் கலக்கிறது. இதனால் இந்த ஏரியில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நத்தப்பேட்டை ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் துா்நாற்றம் வீசுவதாகவும், கழிவுநீா் ஏரியில் கலக்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.