காஞ்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதலைமைச்சா் திட்டத்தின் கீழ் 65 பயனாளிகளுக்கு ரூ.46 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஜி.செல்வம் திங்கள்கிழமை வழங்கினாா்.
எம்.எல்.ஏ.சி.வி.எம்.பி.எழிலரசன் தலைமை தாங்கினாா். கோட்டாட்சிா் பெ.ராஜலெட்சுமி,நவட்டாட்சியா் நிா்மலா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
60 பயனாளிகளுக்கு வீட்டு மனைப் பட்டாவும், தலா ரூ.1,000 வீதம் பெறும் வகையில் 5 பேருக்கு முதியோா் உதவித்தொகை உள்பட 65 பேருக்கு நலத்திட்ட உதவிகளை மக்களவை ஜி.செல்வம் எம்.பி. வழங்கினாா். திமுக நகர செயலாளா் சன்பிராண்ட் ஆறுமுகம், மாவட்ட அவைத் தலைவா் சி.வி.எம்.சேகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.