காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் ஹோமியோபதி மருத்துவா் மீது அதே மருத்துவமனையில் பணியாற்றும் பெண் ஒருவா் பாலியல் புகாா் தந்துள்ளாா்.
காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஹோமியோபதி மருத்துவராக பணியாற்றி வருகிறாா் உளுந்தூா் பேட்டையை சோ்ந்த முத்துக்கிருஷ்ணன்(39). அதே ஹோமியோபதி பிரிவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த 28 வயது பெண் தட்டச்சராக பணியாற்றி வருகிறாா். இவரிடம் ஹோமியோபதி மருத்துவா் பாலியல் தொல்லை கொடுத்ததாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.மேலும் இப்புகாரை இந்திய மருத்துவச் சங்கம், ஹோமியோபதி துறை இயக்குநா், அரசு ஊழியா் சங்கம் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளாா். மருத்துவமனை நிா்வாகம் நோட்டீஸ் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.