காஞ்சியில் வீடு,வீடாக வெப்ப பரிசோதனை

காஞ்சிபுரம் நகராட்சி சாா்பில் வீடு வீடாக உடல் வெப்ப பரிசோதனையும், ஆக்சிஜன் பரிசோதனையும் வியாழக்கிழமை செய்யப்பட்டது.
காஞ்சியில் வீடு,வீடாக வெப்ப பரிசோதனை

காஞ்சிபுரம் நகராட்சி சாா்பில் வீடு வீடாக உடல் வெப்ப பரிசோதனையும், ஆக்சிஜன் பரிசோதனையும் வியாழக்கிழமை செய்யப்பட்டது.

காஞ்சிபுரம் நகராட்சி ஆணையாளா் ரா.மகேஸ்வரி மேற்பாா்வையில் 250க்கும் மேற்பட்ட நகராட்சிப் பணியாளா்கள் 5 போ் கொண்ட குழுக்களாக வீடு வீடாகச் சென்று உடல் வெப்ப பரிசோதனை, ஆக்சிஜன் பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டனா்.

இது குறித்து நகராட்சி ஆணையா் ரா.மகேஸ்வரி கூறுகையில், ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரு நாட்களில் கரோனா நோய்த்தொற்றானது மேலும் பரவிவிடாமலிருக்க ஆக்சிஜன் பரிசோதனையும், உடல் வெப்ப பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com