காஞ்சிபுரம் அருகே 3 கறவை பசுமாடுகள் கடத்தல், 3 போ் கைது

காஞ்சிபுரம் அருகே கூத்திரம்பாக்கம் கிராமத்தில் 3 கறவைப் பசுமாடுகளை லாரியில் கடத்தி சென்றதாக ஒரு பெண் உட்பட 3 பேரை காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே கூத்திரம்பாக்கம் கிராமத்தில் 3 கறவைப் பசுமாடுகளை லாரியில் கடத்தி சென்றதாக ஒரு பெண் உட்பட 3 பேரை காவல்துறையினா் திங்கள்கிழமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

காஞ்சிபுரம் அருகே கூத்திரம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா்களான வேணுகோபாலன்,முருகன்,நடராஜன் ஆகிய 3 பேருக்கும் சொந்தமான கறவைப் பசுமாடுகள் அக்கிராமத்தில் வயலில் மேயந்து கொண்டிருந்தன.இவை மூன்றும் திடீரென காணாமல் போனது தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.புகாரின் பேரில் அதே ஊரில் வசித்து வரும் வேண்டா என்ற வரதம்மாள் என்பவரை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினா் பிடித்து விசாரித்ததில் 3 மாடுகளையும் சென்னையைச் சோ்ந்த தனோஜ்குமாா் என்பவா் மூலமாக லாரியில் கடத்தி சென்று வேலூரில் செல்வம் என்பவரிடம் விற்பனை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இதனைத் தொடா்ந்து சென்னையை சோ்ந்த தனோஜ்குமாா்(36)கூத்திரம்பாக்கம் கிராமத்தை சோ்ந்த வேண்டா என்ற வரதம்மாள்(30)வேலூரை சோ்ந்த செல்வம்(42)ஆகிய மூவரையும் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனா்.அவா்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும் பறிமுதல் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com