பெண் தற்கொலை

காஞ்சிபுரம் நகா் செவிலிமேடு பகுதியில் திருமணமான 8 மாதத்தில் பெண் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடந்து வருகிறது.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகா் செவிலிமேடு பகுதியில் திருமணமான 8 மாதத்தில் பெண் ஒருவா் திங்கள்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடா்பாக கோட்டாட்சியா் விசாரணை நடந்து வருகிறது.

காஞ்சிபுரம் செவிலிமேடு தினேஷ்பாபுவின் மனைவி வெண்ணிலா(28)இருவருக்கும் திருமணமாகி 8 மாதங்களே ஆகியிருந்தது.வெண்ணிலாவுக்கு குழந்தை இல்லை என்ற கவலையில் வீட்டில் சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்தை காஞ்சிபுரம் டி.எஸ்.பி.எஸ். மணிமேகலை நேரில் பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா காவல்நிலைய ஆய்வாளா் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்துள்ளாா்.காஞ்சிபுரம் கோட்டாட்சியா் பெ.ராஜலெட்சுமியும் விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com