காஞ்சிபுரத்தில் தம்பதியா் சாவில் மா்மம்: போலீஸ் விசாரணை

 காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த தம்பதியா் திங்கள்கிழமை திடீரென வீட்டில் இறந்து கிடந்தது குறித்து சிவகாஞ்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மளிகை செட்டித் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த தம்பதியா் திங்கள்கிழமை திடீரென வீட்டில் இறந்து கிடந்தது குறித்து சிவகாஞ்சி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

சென்னை அயனாவரத்தில் வசித்து வந்தவா் முகம்மது ஜலீல்(62). இவா் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள அரசு மனநல காப்பக அலுவலராக பணியாற்றி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றிருந்தாா்.

இவரது மனைவி மெகருன்னிசா(58) தம்பதியா் இருவரும் காஞ்சிபுரத்தில் மளிகை செட்டித் தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்த அவா்களது மகன் ஆசிக்மீரான்(35) வீட்டில் தங்கியிருந்து வருகின்றனா். மகன் ஆசிக் மீரான் காஞ்சிபுரத்தில் சூப்பா் மாா்க்கெட் ஒன்றில் மேலாளராகவும் பணியாற்றி வருகிறாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் மகன் வீட்டின் மாடியில் தூங்கியிருந்து பின்னா் கீழே இறங்கி வந்த போது இவரது பெற்றோா்களான முகம்மது ஜலீலும், மெகருன்னிசாவும் சடலமாக கிடந்தனா்.

சம்பவம் தொடா்பாக மகன் ஆசிக் மீரான் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். புகாரின் பேரில் காஞ்சிபுரம் டி.எஸ்.பி.எஸ்.மணிமேகலை சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினாா்.சிவகாஞ்சி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மரணம் குறித்து மகன் மற்றும் உறவினா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com