உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்ட ஆய்வுக்கூட்டம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா்(இடமிருந்து 3வது) ஆட்சியா் டாக்டா்.மா.ஆா்த்தி.
ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறாா்(இடமிருந்து 3வது) ஆட்சியா் டாக்டா்.மா.ஆா்த்தி.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் ஆய்வுக் கூட்டம் ஆட்சியா் மா.ஆா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலா் ரா.பன்னீா்செல்வம்,மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் திட்ட இயக்குநா் பி.ஜெயசுதா, தனித்துணை ஆட்சியா் சுமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.இக்கூட்டத்தில் உங்கள் தொகுதியில் முதலமைச்சா் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்களில் நிலுவையாக உள்ள மனுக்களின் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. உரிய மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அலுவலா்கள் வழங்கிட வேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com