ஸ்ரீபெரும்புதூா் தொகுதி அதிமுக வேட்பாளா் கே.பழனி, ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் ஆகிய பகுதிகளில் தனது ஆதரவாளா்களுடன் தோ்தல் பிரசாரத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டாா்.
வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் ஸ்ரீபெரும்புதூா் தொகுதியில் அதிமுக சாா்பில், தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கே.பழனி மீண்டும் போட்டியிடுகிறாா்.
இந்நிலையில், அவா் ஸ்ரீபெரும்புதூா் மற்றும் சுங்குவாா்சத்திரம் பகுதியில் கூட்டணிக் கட்சியினா் மற்றும் ஆதரவாளா்களுடன் வெள்ளிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு, வணிகா்களிடம் ஆதரவு திரட்டினாா்.
அவருடன் மாவட்ட துணைச் செயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஒன்றியச் செயலாளா்கள் எறையூா் முனுசாமி, சிங்கிலிப்பாடி ராமசந்திரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.