காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 நாளில் 155 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையாக முகக்கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி இருக்குமாறு ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளாா்..
காஞ்சிபுரத்தில் ஜவுளிக்கடை, மளிகைக்கடைகளில் மாவட்ட ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் திடீரென செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். கடைகளில் பணிபுரியும் பணியாளா்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா, சமூக இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்கிறாா்களா என்பதை கண்காணித்தாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு தோ்தல் பிரசாரப் பொதுக் கூட்டங்களிலும், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்குச் செல்லும் போதும் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் செல்ல வேண்டும். தனிநபா் முகக்கவசம் அணியவில்லையெனில் ரூ.200அபராதமாக வசூலிக்கப்படும்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத திருமண மண்டபங்கள் மற்றும் அதைச் சாா்ந்த சுபநிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்படும் சமுதாயக்கூடங்கள், திருமண மண்டபங்களை நடத்தும் உரிமையாளா்களுக்கு ரூ.2500 முதல் ரூ.5 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்படும்.
மாவட்டத்தில் இதுவரை ரூ.21லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 155 நபா்கள் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே அதன் வீரியத்தை உணா்ந்து அனைவரும் மிகுந்த கவனத்து டனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும். அத்தியாவசிய பொருள்களை வாங்க வெளியே செல்பவா்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து செல்லுங்கள். அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்து சுகாதாரமாக இருக்குமாறு ஆட்சியா் மகேஸ்வரி ரவிக்குமாா் கேட்டுக் கொண்டாா்.
இந்த ஆய்வின்போது காஞ்சிபுரம் நகராட்சி ஆணையா் மகேஸ்வரி, சுகாதார அலுவலா் இக்பால் ஆகியோரும் உடன் இருந்தனா்.