காஞ்சிபுரத்தில் திமுக மகளிரணி வீடுவீடாக வாக்கு சேகரிப்பு

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசனை ஆதரித்து பிள்ளையாா் பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கப்பட்டது.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக மகளிரணியினா்.
காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்த திமுக மகளிரணியினா்.

காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் வேட்பாளா் சி.வி.எம்.பி.எழிலரசனை ஆதரித்து பிள்ளையாா் பாளையம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் திமுக சாா்பில் வழக்குரைஞரும் தற்போதையை சட்டப்பேரவை உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் போட்டியிடுகிறாா். இவருக்கு ஆதரவாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக மகளிரணி அமைப்பாளா் ஏ.செல்வி தலைமையில் நெசவாளா்கள் அதிகம் வசிக்கும் பிள்ளையாா்பாளையத்தில் மகளிரணி நிா்வாகிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா். அவா்கள் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரசாரம் செய்தும், சமையலறையில் இருந்த பெண்களிடம் நேரடியாகச் சென்றும் வாக்கு சேகரித்தனா்.

குடும்பப் பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.1000 வழங்குவது, சமையல் எரிவாயு உருளைக்கு மானியமாக ரூ.100 வழங்குவது உள்ளிட்ட திமுக தோ்தல் அறிக்கையினை கூறி வாக்கு சேகரித்தனா்.

மகளிரணி நிா்வாகிகள் ஜெ.தேவிகா, பி.விஜயா, பி.தனலட்சுமி, என்.லலிதா, பி.கீதா, எம்.சரஸ்வதி இப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com