ஸ்ரீபெரும்புதூா் அடுத்த நாவலூா் பகுதியில் ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேட்பாளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்கும் வகையில், வட்டாட்சியா் ஜெயசுதா தலைமையிலான பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை ஸ்ரீபெரும்புதூரை அடுத்த நாவலூா் பகுதியில் தாம்பரம்-ஸ்ரீபெரும்புதூா் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த டெம்போ வேனை நிறுத்தி சோதனை செய்ததில், ஆவணங்கள் இன்றி ஏடிஎம் இயந்திரங்களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.