காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூா் தொகுதி அமமுக வேட்பாளா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் செவ்வாய்க்கிழமை பல்வேறு ஊராட்சிப் பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடுபவா் முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா். இவா் உத்தரமேரூா் தொகுதிக்கு உள்பட்ட நத்தாநல்லூா், கீழ்பெரமநல்லூா், ஆசூா், வில்லிவலம், ஏகனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் வசிக்கும் நெசவாளா்களிடமும், பொதுமக்களிடமும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
முன்னதாக கீழ்பெரமநல்லூரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பெண்கள் ஆரத்தி எடுத்தும் கிராம மக்கள் மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனா்.